வெள்ளி, 18 நவம்பர், 2011

பேரான கண்டியிலே


கண்டிச் சீமை! சொந்த ஊரில் வறுமை என்பதனால் இங்கு வந்து எதை எதை இழந்தோம்? எல்லாவற்றையும் இழந்தோமே! இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டதால் நாம் இழந்தவைகள் எத்தனை? எத்தனை?

இழந்தவைகளையெல்லாம் சொல்லி, ஏண்டி நீயும் இங்கே வந்தே? என வினா தொடுத்து தன் சோகங்களை அள்ளித் தெளிக்கும் வார்த்தைக் கவிகளின் சிறப்புகள்.....

எதையெல்லாமோ நாம் இழந்தோம்.. கடைசியில்.. பெத்த தாயையுமல்லவா நாம் இழந்தோம்? இதைவிட இன்னும் இழப்பதற்கு என்ன இருக்கின்றது? கண்டிச் சீமைக்கு வந்த பின் நம் நிலைமை தான் என்ன? இந்த பாடல் அழகாக தருகிறது. சுவைத்துப் பாருங்கள்.....

கண்டிக்கு வந்தமினு
கனத்த நகை போட்டமினு
மஞ்ச துளிச்சமினு
மனுச மற்க தெரியலியோ

பாதையிலே வீடிருக்க
பழனிசம்பா சோறிருக்க
எருமே தயிரிருக்க
ஏண்டி வந்தே கண்டிச் சீமை

ஊரான ஊரிழந்தேன்
ஒத்தபனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயே நாமறந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக