திங்கள், 26 மார்ச், 2012

புதுயுகம் படைப்போம் வாரீர் தோழா!





மஸ்கெலியா பெ.லோகேஸ்வரன்

.........................................................

புதுயுகம் படைப்போம் வாரீர் தோழா
பூமியில் தனித்துவம் காப்போம் தோழா
சின்னதோர் தீவினிலே வண்ணக் கனவுகளுடன்
சிறப்பாய் உழைத்திடுவோம் தோழா!

வல்லரசுக் காலை உதறிடுவோம் தோழா
வல்லமையுடன் எழுவோம் தோழா
எள்ளி நகையாடும் குறுஞ் செய்தி கேட்டு
குரலெதிராய் மலர்வோம் தோழா!

அழிந்திட்ட அத்தனையையும் அன்புடனே
அழகாய் அமைத்திடுவோம் தோழா
இழந்ததையும் நடந்ததையும் சொல்லி
இனிவரும் காலத்தையும் இழக்கலாமோ தோழா!

ஓரணியாய் நின்று நம் உள்ளத்தால்
மனித மனங்களை வெல்வோம் தோழா
அன்பையும் ஆயுதமாய் எடுத்தால்
அனைவரும் சமமாய் வாழ முடியும் தோழா!

போட்டி பொறாமை புரட்சியென்று இங்கு
காலத்தையே நாம் வரட்சியாக்கலாமா தோழா?
நம் வருங்காலச் சந்ததிக்கும் மனுகுலத்திற்கும்
நம் பூமியை வெப்பக் காடாக்கலாமோ தோழா!

எழுக என் தோழா எங்கும் நீயும்
ஏற்றம் பெறலாம் தோழா! – நாளும்
சொந்தங்கள் சுகம் பெறவே
சோர்வின்றி எழுக என் தோழா!

இன்றைய உலகம் நமதெனவே எழுக தோழா
இன்முகம் காணலாம் வா தோழா
உலகச் சவால்களை வெல்வோம் தோழா
உன்னதமாய் நாம் வாழ்வோம் தோழா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக