வியாழன், 29 செப்டம்பர், 2011

நாட்டார் பாடல்


பொழுது போக்காக நம்மில் பலர் விளையாட்டுக்களை விளையாடுவது உண்டு. சிலரோ உடற்பயிற்சிக்காக விளையாடுவது உண்டு. பலர் பாரம்பரியங்;களுக்காக விளையாடுவது உண்டு. இன்றும் கூட திருமண வீடுகளில் சம்பிரதாயங்களுக்காக பல்லாங்குழிஅ விளையாட்டை விளையாடுவதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
இப்படியான விளையாட்டுக்களை விளையாடும்போது மகிழ்ச்சிகரமான சூழலை உருவாக்க அக் காலத்தில் நாட்டார் பாடல்களைப் பாடி விளையாடும் அழகு சிறப்பானது. தற்போது கிரிக்கெற் விளையாட்டில் நவீனத்துவமாக 'றம்பெட்' இசையை நாமெல்லாம் கேட்டு ஆனந்தப்படவில்லையா? அதுபோலத்தான் அந்தக்காலத்தில் இந்தப் பாடல்கள் வரவேற்புப் பெற்றன. கிட்டியடித்தல் விளையாட்டில் வரும் பாடலைப் பாருங்கள்!

கவடியடிக்கப் கவடியடிக்கக்
கைகால் முறியக் iகால் முறியக்
காலுக்கு மருந்து தேடிக்கிட்டு தேடிக்கிட்டு

மரம்பட்டை மருதம்பட்டை
வௌ;வாலோடிய தென்னம்பட்டை
பூம்பட்டை புளியம்பட்டை
பட்டணம் பட்டணம் பட்டணம்.

2 கருத்துகள்: