வியாழன், 1 டிசம்பர், 2011

இடுப்பொடிஞ்சு நிக்கயிலே






தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களது பாடல்கள் உழைப்பையும் வேதனையையும் காலநிலையையும் அப்படியே படம்பிடித்துக் காட்டுவனவாய் அமைகின்றன. இந்தப் பாடலில் ஒரு உழைப்பாளியின் சோகம் மறைந்திருக்கின்றதது என்றாலும் உண்மையில் அங்கு அவனின் வேதனையும் ஆழமாய் இருக்கிறது. பாடல்கள் கற்பனைக்கு இரசனைக்குமாக வந்தவைகள் அல்ல. அவை யதார்த்தத்தின் மறைக்கமுடியாத வெளிப்பாடுகள். இந்த தொழிற் பாடலைப்பாருங்கள்.

வாடை அடிக்குதடி வடகாத்து வீசுதடி
சென்னல் அடிக்குதடி-நாம் சேந்து வந்த கப்பலிலே

எண்ணிக் குழிவெட்டி இடுப்பொடிஞ்சு நிக்கயிலே
வெட்டு வெட்டு எங்கிறாரே பொட்டுவச்ச கங்காணி

ஆத்தோரம் கொந்தராப்பு அது நெடுக வல்லாரை
வல்லாரை வெட்டியல்லோ – என் வல்லமை கொறஞ்ச தய்யா

ஊரான ஓர் இழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
பாரான கண்டியிலே பெத்த தாயும் வீடிழந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக