வியாழன், 1 டிசம்பர், 2011

எது அழகு?




எது அழகு? நான் பேசுகிறேன்.... நான் பாடுகின்றேன்.... நான் ஆடுகின்றேன்..... இப்படி எதை எதையோ செய்கின்றேன்..... எல்லாவற்றையும் அழகு என்கின்றார்கள்...... இப்படியிருக்க, என் அழகு வெறுமனே இந்த உடலின் மீது போர்த்தப்பட்டிருக்கும் தோலினால் தான் அழகாக்கப்படுகின்றதா?

ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் எதனை வைத்து அழகாகப் பார்க்கின்றார்கள்? ஒரு காலத்தில் மர்லின் மன்றோவையும் பிறகு ஐஸ்வரியா ராயையும் அழகு என்று சொன்ன உலகம் இந்த நமது தமிழ் சினிமாவில் வரும் சாவித்திரி,ஸ்ரீதேவி, மாதவி,ரேவதி,மீனா,நக்மா.குஸ்பு,ஸ்நேகா,தமன்னா இப்படி ஐந்து வருடத்திற்கொருவரை அழகு என்று நம்பர் ஒன் இடத்திற்கு மாற்றவில்லையா?

அழகை அழகு நிலையத்தில் தேடினால் அது ஆபத்துதான்... அதனால் தான் என்றோ அழகு ஆபத்தானது என்றார்கள்..... நம்மில் பலர் உடல் அழகைப் பற்றிச் சிந்திப்பவர்கள் உள அழகைப் பற்றிச் சிந்திப்பதில்லை....... ஒரு உதாரணக் கதை ஒன்று பாருங்கள்! உயரதிகாரிகள் பலர் ..... அவர்கள் எப்போதும் அந்த உத்தியோகத்தரைப் பார்த்து நீங்கள் இங்கிருக்க வேண்டியவர் இல்லை... உங்களது திறமைக்கு என்று... சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக... அவரை உயர்த்திப் பேசியே அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். ஒரு நாள் நல்ல அதிகாரி என்று நினைத்து அவரிடம் தனது மேன்மை தொடர்பாக செய்தியைச் சொன்னபோது அந்த அதிகாரிக்கு வந்ததே கோபம்.... ஆரத்தழுவியர் இப்போது பேசுவது கூட இல்லை...

இப்படியிருக்க, வெறுமனே அழிந்து போகும் உடலாகிய பிணத்திற்கு அழகு செய்து பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகுவதைவிட உள்ளமாகிய அழகைக் கட்டி எழுப்புவது மேன்மையானது. மற்றவர்களைப் புகழாவிட்டாலும் அவர்களது வாய்ப்புகளைத் தட்டிக் கழிக்காமல் இருப்பதே நன்மையானது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக