வியாழன், 1 டிசம்பர், 2011

எதிர்காலம்,வாழ்க்கை





தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளாகிய நாம் நமது வாழ்க்கையின் வெற்றியை எப்படி பார்க்கின்றோம்? நாம் நமது வாழ்க்கையில் ஏதாவது மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

இந்த மாற்றம் தேயிலைத் தோட்டங்களிலிருந்து நமது உழைப்பு மாற வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான இளைஞ்களிடம் இருக்கின்றது. ஆனால், இதற்காக நமது வாழ்வில் அதுவும் இளம்பராயத்தில் செய்யவேண்டிய,சாதிக்க வேண்டிய,முயற்சிக்க வேண்டிய எண்ணங்களை நாம் எப்படி நாம் நமது வாழ்க்கைப் பயணத்தில் இணைத்துக் கொள்கின்றோம் என்பதே இன்றைய இளைஞர்களிடம் முன் வைக்கப்படும் ஒரு வினா!

எதிர்காலம்,வாழ்க்கை இது எல்லாம் நமது அன்றாட நிகழ்வுகளிலிருந்து விலகியிருக்கின்ற ஒன்றா? உண்மையில் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. மலையக இளைஙர், யுவதிகள் தமது உழைப்பை எந்தக் கோணத்திலும் சரியாகச் செய்ய ஆர்வம் காட்டுதல் வேண்டும். அது கல்வியாக இருந்தாலும் சரி,கணனியாக இருந்தாலும் சரி,வேலையாக இருந்தாலும் சரி அது நிறைவானதாய் இருக்க வேண்டும்.

நான் இப்டித் தான் வரவேண்டும் என்ற எண்ணத்தை வலுவாகக் கட்டியெழுப்பிக் கொள்ளல் வேண்டும் .அதற்காக ஒவ்வொரு நொடியும் சிந்தித்துச் செயற்படல் வேண்டும். நமது கவனம் முழுவதும் தன்னம்பிக்கையுடன் கூடியதாய் அமைதல் வேண்டும். அதற்கு முதலில் ஆரோக்கியமும் தெளிவும் அவசியம். உழைப்பையும் முயற்சியையும் கைவிடாமல் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது நம்மிடையே விதைக்கப்படும் அழகான செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக