புதன், 2 நவம்பர், 2011

வீமனோட பொண்டாட்டி




தமிழை எழுதி இலக்கியங்களாக வடித்து அவற்றைப் பொக்கிசமாகச் சேர்த்து வைத்த ஒரு பரம்பரையிலிருந்து நம் மலையக தமிழ் மக்கள் சற்றே வேறுபடுகின்றனர். எழுதாமல் அவ்வப்போது தமக்குத் தேவையான விடய்ஙகளை செவி வழியாகச் செவிமடுத்து வாய் மொழிப் பாடலாக அவர்கள் இசைக்கும் பாடல்கள் அழகானவை.

இவர்களது வாழ்வில் வீமனின் கதையும் கர்ணனின் கதையும் வேலனின் கதையும் எப்போதும் பிரிக்கமுடியாத ஒரு வாழ்க்கை நிகழ்வாகவே மாறியிருக்கின்றதை இச்தப் பாடலின் மூலம் அறியலாம்.

காட்டிலேயுள்ள ஆதிவாசியைத் திருமணம் செய்து அகாண்ட வீமன் வேடர் குலத்துப் பெண்ணாகிய வள்ளியை வேலன்................. காப்பியங்களில் தனது வாழ்நாட்களை கடைசிவரை கீழ்த் தட்டு சாதாரண மகனாக வாழ்ந்து வீரனாகவே இறந்து போன ஒரு உன்னத கதாபாத்திரத்தின் கதையை பாடலாக ரசக்கும்போது அதன் உணர்வையும் அழைகையும் ரசிக்க முடியாமல் போகுமா என்ன?

வேரெல்லாம் கண்ணாடி
என் வீமனோட பொண்டாட்டி
வீமனுக்கு வந்த வெள்ளி மதிக்கலியே
வேணுமின்னுத் தேடலியே!

கையெல்லாம் கண்ணாடி
கர்ணனோட பொண்டாட்டி
எங் கர்ணன் மதிச்சாலும்
எங் கர்ணனுக்கு வந்தவ

கள்ளி மதிக்கலியே
காணாமின்னு தேடலியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக