இயற்கை எப்போதும் நம் மலையகத்திற்கே சொந்தம்.அது அவ்வளவு அற்புதமானது.அழகானது.மனித மனங்களை இதய சுத்தியுடன் வெல்லக் கூடியது.கனத்த இதயங்களையும் அது இதமாய் அழைத்து அரவணைத்து தமதாக்கிக் கொள்ளும்.ஒவ்வொரு அழகான ப+க்களும் நெற்றி வியர்வையை உரமாக்கும்உiழைப்பின் சிகரங்களுக்கு அர்ச்சனைப் ப+க்கள் தான்.இங்கு வைரமான இதயங்கள் மட்டும் உழைப்பினால் எழுந்ததல்ல!அரவணைக்கும் அத்தனை காவல் தெய்வங்களும் இவர்களை உயிராய்க் காத்து நிற்கும்.எல்லைத் தெய்வம்,கருப்பண்ணசுவாமி.வாட்டுமுனி,ரோதமுனி.என்றெல்லாம் தனிக் காட்டிலும்,
சுடுகாட்டு மலை,மேடு என எல்லா இடங்களிலும் பருவ வயதுப் பெண்கள் முதல் குழந்தைப் பேறுக்காகக் காத்து நிற்கும் அனைத்துப் பெண்களை மட்டுமல்ல குழந்தை முதல் பெரியவர்கள் வரை இவைகளே இவர்களின் மூல ஆதாரம்!ஒரு காலத்தில் இந்திய கலாசாரப் பிண்ணனியுடன் வேட்டி.சால்வை,சட்டை எனவும் அதற்கு மேலாக கோட்டை அணிந்து வெள்ளைக்காரர்களுக்கே புதிய கலாசாரம் காண்பித்தது நம் சமூகம்!
ஆனால் என்ன? கல்வியை மட்டும் ஒரு சாராரின் சொத்தாக நம் சமூகம் கை விட்டுப் பொனதன் விவரம் தான் இன்னமும் புரியவில்லை.தேயிலைக் கொழுந்தை கிள்ளி எறிந்து விடுவார்களே என்ற பயம் வெள்ளைக்காரனிடம் இருந்ததால் நம் குழந்தைகள் கல்வியை கரம் பிடிக்க காலம் பல காத்திருந்தார்கள்.
ஒருவேளை நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களின் முதல் நிலைத் தொழிலாளர்களாக விளங்கிய கங்காணிமார் பரம்பரை இதனை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் நம் அன்றைய குழந்தைகள் கல்வியில் தேறியிருப்பார்கள்.இன்று நாம் எனது தாத்தா பேராசிரியர் என்றோ.வைத்தியர் என்றோ,அரசாங்க உத்தியோகத்தர் என்றோ மார் தட்டியிருக்கலாம்.மனம் நினைக்கிறது.காலம் கூட ஒரு வேளை நம்மை ஏமாற்றியிருக்குமோ என்று.....................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக