
நமது சமூகம் அச்சு இலத்திரனியலற்ற ஒரு காலப் பகுதியில் மனம் லயிக்கும் இசையே அவர்களின் பொழுதுபோக்கு!ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்ற வரிகள் கூட உழைப்பாளிகளின் உழைப்பின் உயர்வுக்காகவே எழுந்துள்ளது.ஒரு சமூகத்தின் எழுச்சி,விடுதலை,துயரம்,சந்தோசம்,ஆறுதல்,முயற்சி எல்லாவற்றையும் கட்டியம் கூறி
நின்றது எம் மலையக நாட்டார்பாடல்கள்.
எமது தமிழலக்கியப் பாரம்பரியத்தில் நாடோடிப் பாடல்கள்,கிராமிய இலக்கியங்கள்,நாட்டுக் கூத்துக்கள்.வாய்மொழி இலக்கியம்,நாட்டார் பாடல்கள் என்பனவை கைகோர்து வளம் சேர்த்துள்ளன.சாதாரண படிப்பறிவில்லாத மொழித் தேர்ச்சியற்ற ஓரு காலத்தில் இசையும் மெட்டும் கூட்டி வார்த்தைகளை வரியாக்கி தாளம் தப்பாமல் கருத்தாழத்துடன் பாடல்களைப் படைத்த பாமரனின் வாழ்க்கை அலாதியானது.ஒவ்வொரு படைப்பும் ஒவு;வொரு செயலும் ஒவ்வொரு நிகழ்வும் இவர்களது எழுதா இலக்கியத்தின் ஒரு மைல் கல்லே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக