வெள்ளி, 7 அக்டோபர், 2011

காதலியைத் தேடி


காதல் ஒரு அழகான:எளிமையான உணர்வு! அதை அறிந்தவனுக்கு அற்புதம்! அறியாதவனுக்கு விரசம் அல்லது காமம்! ஆனால் காதல் வந்தவன் சராசரி மனிதன் ஆகின்றான். இந்தக் காதல் சிறுசு முதல் பெருசு வரை ஒரு கலக்குக் கலக்கிவிட்டுத்தான் பார்க்கிறது! அஞ்சுக்கு அம்மாவின் மீது காதல் ஐம்பதுக்கும் காதல்! ஆனால் அது இளசுகளின் மீதல்லவா படர்கிறது!


;சிருங்ஹாரம்' எனும் இந்தக் காதல் இளவயசுக் காதலர்களை மையமாகக் கொண்டு வெளிப்படுத்துகின்றது. தமிழ் இலக்கியப் பாடகர்களிடம் 'எசப்பாட்டு' எனும் பாடலுக்குப் பதில் பாட்டுப் பாடும் உத்தி அந்தக் காலம் முதலே மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்துள்ளமையைக' காணக்கூடியதாக உள்ளது.


ஒரு காதல் நடு நிசியிலே அதாவது இரவிலே தன் காதலியைத் தேடி வருவதாக அவனுக்குச் சொல்கின்றான். அதற்கு மனிதனாக ஒரு காதலனாக வராமல் காட்டு ஜீவராசிகளாக மாறி நான் வேடங் கொண்டு வருவேன் என்கிறான் காதலன்! அதற்குக் காதலியோ அப்படி வரும் தன் காதலனுக்கு அப்படி வருவதைத் தடுக்க எச்பாட்டு மூலம் தரும் வார்த்தைப் பிம்பங்களின் வடிவம் அசத்தலானது! காதல் எதையும் : எப்படியும் செய்ய வைக்கும் என்பதையும் காதல் துணிந்தவனுக்கே சுவர்க்கம் என்பதையும் இந்தச் சிருங்ஹாரப்பாடல் அழகாக நம் காதுகளுக்கு இனிமையாகவும் பொருட் சுவையாகவும் மாறி வருகிறது மகிழ்ச்சிதானே!


ஊரார் உறங்கையிலே
உற்றாருந் தூங்கையிலே
நல்லபாம்பு வேடங்கொண்டு
நடுச்சாமம் வருவாயானால்
ஊர்க்குருவி வேடங்கொண்டு
உயரப்பறந்திடுவேன்!

ஊர்க்குருவி வேடங்கொண்டு
உயரப் பறந்தாயானால்
செம்பருந்து வேடங்கொண்டு
செந்தூக்காய்த் தூக்கிடுவேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக